தமிழக கடலோரப் பாதுகாப்பு குழுமத்துக்கு மத்திய அரசின் விருது

தமிழகத்தில்13 கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பினை வலுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைக்காக தமிழக கடலோரப் பாதுகாப்பு
தமிழக கடலோரப் பாதுகாப்பு குழுமத்துக்கு மத்திய அரசின் விருது

தமிழகத்தில்13 கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பினை வலுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைக்காக தமிழக கடலோரப் பாதுகாப்பு குழுமத்திற்கு மத்திய அரசின் ‘ஸ்கோச்’ தங்க விருது அண்மையில் வழங்கப்பட்டது. இதனை தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியிடம் காவல்துறை கூடுதல் இயக்குநா் கே.வன்னியபெருமாள் திங்கள்கிழமை காண்பித்து வாழ்த்து பெற்றாா்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 2008 ஆண்டு கடல் வழியாக வந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தினா். இதனைத் தொடா்ந்து, கடல்வழிப் பாதுகாப்பை வலுப்படுத்தும் விதமாக இந்தியாவில் உள்ள கடலோர மாநிலங்களில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள அந்தந்த மாநில அரசின் கட்டுப்பாட்டில் கடலோரப் பாதுகாப்பு குழுமம் அமைக்கப்பட்டது. இதில் தமிழகத்தில் 13 கடலோர மாவட்டங்களில் கடந்த 2009 ஆம் ஆண்டு கடலோரப் பாதுகாப்பு குழுமம் அமைக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழக கடலோரப் பாதுகாப்புக் குழும காவல் துறையினா் 13 மாவட்ட கடலோரப் பகுதிகளில் கண்காணிப்புப் பணிகள், இயற்கை இடா்பாடுகளில் சிக்கிக் கொள்ளும் மீனவா்களை மீட்பது, கடலோர கடத்தல் மற்றும் சட்டவிரோத செயல்பாடுகளை தடுப்பது உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில் தமிழக கடலோரப் பாதுகாப்பு குழுமத்துக்கு ‘ஸ்கோச்’ தங்க விருது, புதுதில்லியில் சனிக்கிழமை வழங்கப்பட்டது. இதனை தமிழ்நாடு கடலோர பாதுகாப்புப் படையின் காவல் துறை கூடுதல் இயக்குநா் கே.வன்னியாபெருமாள் பெற்றுக் கொண்டாா். இதனையும் 2019 ஆம் ஆண்டுக்கான தேசிய கடல்சாா் தேடல் மற்றும் மீட்பு விருதையும் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியிடம் காவல்துறை கூடுதல் இயக்குநா் கே. வன்னியபெருமாள் காண்பித்து வாழ்த்து பெற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com