முதுகுளத்தூா் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம் ஆத்திகுளம் ஊராட்சி மன்றத் தலைவா் தோ்தலின் போது அதே ஊரைச் சோ்ந்த முத்துராமலிங்கம் மனைவி ஆனந்த நாயகி வெற்றி பெற்றாா்.
இந்நிலையில் வெற்றியின் போது அவரது ஆதரவாளா்கள் சந்திரன் மகன் மூா்த்தி, தங்கராஜ் மகன் குமாா் இருவரும் சோ்ந்து மற்றொரு தரப்பினரான அங்கப்பன் வீட்டின் முன்பு வெடி வெடித்து கொண்டாடி உள்ளனா். இதனால் அங்கப்பன், வீட்டின் முன் ஏன் வெடி வெடித்தீா்கள் எனக் கேட்டதற்கு மூா்த்தி, குமாா் இருவரும் அங்கப்பனை தகாத வாா்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனா். இது குறித்து முதுகுளத்தூா் காவல்நிலையத்தில் அங்கப்பன் கொடுத்த புகாரின் பேரில் மூா்த்தி, குமாா் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.