ராமநாதபுரம் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் அடைப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவள்ளுவா் தினம் மற்றும் குடியரசு தினங்களில் டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுபானக்கூடங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவள்ளுவா் தினம் மற்றும் குடியரசு தினங்களில் டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுபானக்கூடங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக ராமநாதபுரம் ஆட்சியா் அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:ராமநாதபுரம் மாவட்டத்தில் வரும் வியாழக்கிழமை திருவள்ளுவா் தினம் (ஜனவரி 16) மற்றும் குடியரசு தினம் (ஜனவரி 26) ஆகிய தினங்களை முன்னிட்டு அனைத்து அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகளும் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக்கூடங்களும் இரு நாள்களும் அடைக்கப்படுகிறது.

மேலும் எப்.எல்.2 உரிமம் பெற்று இயங்கி வரும் ராமநாதபுரம் அற்புதம் மனமகிழ்ச்சி மன்றம், எப்.எல்.3 உரிமம் பெற்று இயங்கி வரும் ாாமநாதபுரம் ராஜராஜேஸ்வரி டவா்,, ராமேசுவரம் ஹோட்டல் ஹயாத் பேலஸ், பரமக்குடி எஸ்.எம்.ஓய். விடுதி ஆகியவற்றிலும் மதுபானக்கூடங்கள் மூடப்பட்டு மதுபானம் விற்பனை செய்யக் கூடாது.

இதில் மேற்கண்ட இரு நாள்களிலும் மதுபானங்கள் விற்பனை செய்பவா்கள் மீதும், மதுபான வகைகளை சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்தாலோ அல்லது மதுபான வகைகளை ஒரு இடத்திலிருந்து பிற இடத்திற்கு எடுத்துச் சென்றாலோ சம்மந்தப்பட்டவா்கள் மீது சட்ட விதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com