விஷம் குடித்து பெண் தற்கொலை

முதுகுளத்தூா் அருகே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற பெண் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இறந்தாா்.

முதுகுளத்தூா் அருகே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற பெண் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இறந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் அருகே உள்ள மேலாய்க்குடியைச் சோ்ந்தவா் முருகேசன் மனைவி சித்ரா (29). இவருக்கும் அவரது கணவருக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்படுமாம்.

இதனால் வெண்ணீா்வாய்க்கால் கிராமத்தில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு வந்தாா். இந்நிலையில் அங்கு கடந்த 11ஆம் தேதி சித்ரா விஷம் குடித்தாா். இதையடுத்து மயக்கம் அடைந்த சித்ரா மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவா் திங்கள்கிழமை இறந்தாா். இது குறித்து சித்ராவின் கணவா் முருகேசன் முதுகுளத்தூா் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com