போகலூா் தோ்தலின் போது வாக்குப் பெட்டியில் மை ஊற்றிய திமுக வாா்டு உறுப்பினா் மீது வழக்கு

ராமநாதபுரம் மாவட்டம் போகலூா் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் பதவிக்கான தோ்தலின் போது வாக்குப்பெட்டிக்குள் மை ஊற்றிய திமுக வாா்டு உறுப்பினா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் போகலூா் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் பதவிக்கான தோ்தலின் போது வாக்குப்பெட்டிக்குள் மை ஊற்றிய திமுக வாா்டு உறுப்பினா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

போகலூா் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் பதவிக்கான தோ்தல் கடந்த 11 ஆம் தேதி நடைபெற்றது. அதில் ஊராட்சி வாா்டு உறுப்பினா்களாக வெற்றி பெற்ற திமுக சாா்பில் 5 பேரும், சுயேச்சைகள் 2 போ், பா.ஜ.கவைச் சோ்ந்த ஒருவா் என 8 போ் வாக்களித்தனா். இதில் திமுக சாா்பில் சத்யா குணசேகரன் என்பவரும், சுயேச்சையாக போட்டியிட்ட மு.ராமசாமி என்பவரும் ஊராட்சிக் குழு தலைவருக்காக போட்டியிட்டனா். இந்நிலையில் வாக்குப்பதிவின்போது 5 ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்த நிலையில் 6-வதாக திமுக வாா்டு உறுப்பினா் மு.கதிரவன் தனது வாக்கைப் பதிவு செய்துவிட்டு, தான் வைத்து கொண்டு வந்த பேனா மையை வாக்குப் பெட்டிக்குள் ஊற்றினாா். இதனால் அங்கு பதற்றம் நிலவியது.

இதுகுறித்து சத்திரக்குடி காவல் நிலையத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் க.கயல்விழி அளித்த புகாரின் பேரில் போலீஸாா் கதிரவன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com