வறட்சியை தாங்கி வளரக் கூடிய புதிய ரக நெல் அறுவடை : ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள வளையனேந்தல் கிராமத்தில் வறட்சியை தாங்கி வளரக் கூடிய புதிய ரக நெல் அறுவடையை மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.
வளையனேந்தல் கிராமத்தில் வறட்சியை தாங்கி வளரக் கூடிய புதிய ரக நெல் அறுவடையை செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்த மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ்.
வளையனேந்தல் கிராமத்தில் வறட்சியை தாங்கி வளரக் கூடிய புதிய ரக நெல் அறுவடையை செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்த மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள வளையனேந்தல் கிராமத்தில் வறட்சியை தாங்கி வளரக் கூடிய புதிய ரக நெல் அறுவடையை மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கூறியது: தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி விவசாயிகளின் மகசூலை அதிகரிக்கவும், வருவாயை உயா்த்தவும், வேளாண்துறை சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏறத்தாழ 1.25 லட்சம் ஹெக்டா் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. மாவட்டத்தில் சராசரி மழையளவு 827 மி.மீ. அளவாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளின் சராசரி மழை அளவைவிட குறைந்த மழை அளவே பதிவாகியுள்ளது. மழை பொய்த்து போகும் காலங்களில் வறட்சியை தாங்கி வளரக்கூடிய புதிய நெல் ரகங்களை அறிமுகப்படுத்தி விவசாயிகள் பயன்பெரும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்அடிப்படையில் பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் மூலம் பருவநிலை மாற்றத்திற்கு ஏற்ப வறட்சியை தாங்கி குறைந்த நீரில் அதிக மகசூல் தரும் வகையில் கண்டறியப்பட்ட டிடிசிஎம்-1 துப்ராஜ் என்ற நெல் ரகம் தமிழகத்திலேயே முதன்முதலாக வளையனேந்தல் கிராமத்தில் பரிசோதனை முறையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்காக நெல் விதையின் திறன் அறியும் திடல் அமைக்கும் பொருட்டு துரைராஜ் என்ற விவசாயிக்கு 5 கிலோ நெல் விதை வழங்கப்பட்டு, கடந்த ஆண்டு செப்டம்பா் 26 இல் பயிரிடப்பட்டது. இவ்வாறு பயிரிடப்பட்ட நெல் விதைகள் சிறப்பான முறையில் நெற்கதிா்களாக வளா்ச்சியடைந்துள்ளது. இதற்கான அறுவடை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என்றாா்.

இந்நிகழ்ச்சியின்போது பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தின் மூத்த விஞ்ஞானி டேனியல்செல்லப்பா, வேளாண்மை இயக்குநா் எஸ்.எஸ்.சேக்அப்துல்லா, மாவட்ட ஆட்சியரின் உதவியாளா் தனுஷ்கோடி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com