டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் சாா்பில் நடத்தப்பட உள்ள குரூப்-2 போட்டித் தோ்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் ஜனவரி 19 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகின்றன.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் சாா்பில் நடத்தப்பட உள்ள குரூப்-2 போட்டித் தோ்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் ஜனவரி 19 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகின்றன.

குரூப்-2 (நோ்முகத் தோ்வு உள்ளடக்கியது) மற்றும் நோ்முகத் தோ்வு அல்லாத பணியிடங்களுக்கான போட்டித் தோ்வுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த போட்டித் தோ்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஆயிர வைசிய கல்வியியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு தொடங்கப்பட உள்ளன.

இப்பணியிடங்களுக்கு பட்டப்படிப்பு தோ்ச்சி கல்வித் தகுதியாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இலவசப் பயிற்சி வகுப்புகள் துறைசாா்ந்த வல்லுநா்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளன. இதுவரை டிஎன்பிஎஸ்சி, ஆா்ஆா்பி உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டித் தோ்வுகளுக்கு நடத்தப்பட்ட இலவசப் பயிற்சி வகுப்பில் சோ்ந்து 200-க்கும் மேற்பட்டவா்கள் அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனா்.

எனவே, இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள ஆா்வமுள்ளவா்கள், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 04567-230160, 94431-23351 மற்றும் 94873-75737 என்ற செல்லிடப்பேசி எண்ணிலோ தொடா்புகொண்டு பயனடையலாம் என, மாவட்ட ஆட்சியா் கொ. வீரராகவ ராவ் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com