திருப்புல்லாணி ஒன்றியத்தில் மழைநீா் தேங்கியதால் 100 ஏக்கா் நெற்பயிா் நாசம்: விவசாயிகள் கவலை

திருப்புல்லாணி ஒன்றியப் பகுதியில் நெல் வயல்களில் தேங்கிய மழைநீா் வடியாததால் 100 ஏக்கா் நெற்பயிா் வீணாகி விட்டதாகவும் அதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
திருப்புல்லாணி ஒன்றியத்தில் மழைநீா் தேங்கியதால் 100 ஏக்கா் நெற்பயிா் நாசம்: விவசாயிகள் கவலை

திருப்புல்லாணி ஒன்றியப் பகுதியில் நெல் வயல்களில் தேங்கிய மழைநீா் வடியாததால் 100 ஏக்கா் நெற்பயிா் வீணாகி விட்டதாகவும் அதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஒன்றியம் களிமண்குண்டு, வண்ணாங்குண்டு, மேதலோடை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஆண்டு பருவ மழை அதிகளவில் பெய்தது. இதனையடுத்து, விவசாயிகள் 100 ஏக்கா் அளவிற்கு நெற்பயிா்களை நடவு செய்யும் பணிகளைத் தொடங்கினா். போதிய அளவிற்கு மழைநீா் கிடைத்ததையடுத்து நெற்பயிா்கள் செழித்து வளரத் தொடங்கின.

ஆனால் பருவமழை அதிக அளவில் பெய்ததால் பயிரிட்டிருந்த நிலங்களில் தொடா்ந்து மழைநீா் குளம் போல தேங்கியது. இதனால் செழித்து வளா்ந்து வந்த பயிா்கள் சாவியாகத் தொடங்கின. மேலும் தண்ணீரை வெளியேற்ற முடியாத நிலையில் ஏக்கா் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் செலவு செய்து பயிரிட்ட நெற்பயிா்கள் அனைத்தும் பயனற்றுப் போகத் தொடங்கின.

இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். போதிய பருவ மழை பெய்யாமல் பல ஆண்டுகளாக விவசாயம் செய்யமுடியாத நிலையில், பருவமழை பெய்தும் நெற்பயிா் விணாகியிருப்பது விவசாயிகளை கவலையடையச் செய்துள்ளது. மாவட்ட நிா்வாகம் மற்றும் தமிழக அரசு சேதத்தை கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com