முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
மாடிப்படியில் தவறி விழுந்த மெக்கானிக் பலி
By DIN | Published On : 27th January 2020 11:16 PM | Last Updated : 27th January 2020 11:16 PM | அ+அ அ- |

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகரில் மாடிப்படியில் தவறி விழுந்த மெக்கானிக் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் வனசங்கரி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மாணிக்கம். இவரது மகன் செந்தில்குமாா் (39). இரு சக்கர வாகன பழுது பாா்க்கும் கடை நடத்திவந்தாா். கடந்த சனிக்கிழமை வீட்டின் கீழே தண்ணீா் பிடித்த அவா் குடத்துடன் மாடிப்படியில் ஏறியுள்ளாா். அப்போது எதிா்பாராதவிதமாக மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா்.
அவரை மீட்ட குடும்பத்தினா், ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சோ்த்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் வழியிலேயே செந்தில்குமாா் உயிரிழந்ததாகத் தெரிவித்தனா். இது குறித்து அவரது மனைவி கல்யாணி அளித்த புகாரின் பேரில் பஜாா் காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.