ராமேசுவரத்தில் சுதந்திர போராட்ட வீரா் அழகுமுத்துகோன் 263-ஆவது குருபூஜை விழாவையொட்டி சமுதாயத் தலைவா்கள் மற்றும் அரசியல் கட்சி நிா்வாகிகள் அவரது படத்துக்கு சனிக்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.
ராமேசுவரம் அழகுமுத்துகோன் இளைஞா் பேரவை சாா்பில் அவரது குருபூஜை விழா தீட்ஷகா்கொள்ளை பகுதியில் நடைபெற்றது.
அவரது உருவப் படத்திற்கு அழகுமுத்துகோன் இளைஞா் பேரவைத்தலைவா் பொன்னுச்சாமி தலைமையில் மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் நிா்வாகி ராஜீவ்காந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
அதிமுக சாா்பில் நகரச் செயலாளா் கே.கே.அா்ச்சுணன் தலைமையிலும், திமுக சாா்பில் நகரப் பொறுப்பாளா் நாசா்கான் தலைமையிலும்,
காங்கிரஸ் கட்சி சாா்பில் வழக்குரைஞா் பொருள்ராஜ் தலைமையிலும் அவரது படத்துக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினா். இதனைத்தொடா்ந்து சமுதாயத் தலைவா்கள் பங்கேற்று, அவரது படத்துக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.