82 நாள்களுக்குப் பின் மீன்பிடிக்க சென்ற 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் 

82 நாள்களுக்குப் பின் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க உற்சாகத்துடன் சென்றனர். 
82 நாள்களுக்குப் பின் மீன்பிடிக்க சென்ற 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் 

82 நாள்களுக்குப் பின் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க உற்சாகத்துடன் சென்றனர். 

ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் மீன்பிடி தடைக் காலம் முடிவடைந்து 82 நாள்களுக்கு பின் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் உற்சாகத்துடன் சனிக்கிழமை மீன்பிடிக்க சென்றனர். தமிழகத்தில் கிழக்கு கடற்கரை பகுதிகளில் மீன் இன பெருக்க காலமாக கருத்தப்படும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை 61 நாட்கள் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல அரசு தடை விதித்துள்ளது. இந்த ஆண்டு கரோனா நோய்பரவலை தடுக்கும் விதமாக முன்கூட்டியே மீனவர்கள் மீன்பிடிக்க செல்லத் தடை விதிக்கப்பட்டது.

இதனால் தமிழக அரசு மீன்பிடி தடைக் காலத்தை 47 நாட்களாக குறைந்து ஜூன் 01 ஆம் தேதி முதல் மின்பிடிக்க செல்லலாம் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தொண்டி உள்ளிட்ட பகுதிகளில் கரோகனா நோய் பரவலைத் தடுப்பு நடவடிக்கை காரணமாக ஊரடங்கு போடப்பட்டு பொது முடக்கம் செய்யப்பட்டதால் மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை சீரமைக்க கால தாமதம் ஆகும் என்பதால் ஜூன் 15 ஆம் தேதி மீன்பிடிக்க செல்ல உள்ளதாக அறிவித்தனர். 

மேலும் இறால் மீன் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களின் போதி பணியாளர்கள் இல்லாததால் மீனவர்கள் பிடித்து வரும் இறால் மீன்களை கொள்முதல் செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் பாக்நீரினை பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தொண்டி, சோழியகுடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 1650 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் சனிக்கிழமை மீன்பிடிக்கச் செல்ல உள்ளதாக அனைத்து விசைப்படகு சங்கம் நிர்வாகிகள் நடத்திய பேச்சுவார்த்தில் 13 ஆம் தேதி முற்பகல் மீன்பிடிக்க செல்லலாம் என அறிவித்தனர். 

இதனைதொடர்ந்து, சனிக்கிழமை காலையில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தொண்டி உள்ளிட்ட மீன்வளத்துறை அலுவலகத்தில் மீன்பிடிக்க செல்லும் விசைப்படகுகள் மற்றும் மீனவர்களுக்கு அனுமதி டோக்கன் வழங்கப்பட்டது. மேலும் மீன்வளத்துறை உதவி இயக்குநர் யுவராஜ் கரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக மீனவர்கள் அனைவரும் பாதுகாப்பு முகக்கவசம், மற்றும் சமூக இடைவெளியை பின்ன பற்ற வேண்டும் என மீனவ சங்க தலைவர்கள் மற்றும் மீனவர்களிடம் தெரிவித்தார். 

இதனையடுத்து, ராமேசுவரத்தில் இருந்து 750 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் 82 நாட்களுக்கு பின் அதிகளவில் இறால் மீன் கிடைக்கம் என்ற  ஆர்வத்துடன் சென்றுள்ளனர். இந்த தடைகாலத்தின் போது படகு ஒன்றுக்கு 2 லட்சம் முதல் 5 லட்சம் வரை செலவு செய்து படகுகளை தயார் செய்து கடலுக்கு சென்றுள்ளனர். ஞாயிற்றுகிழமை கரை திரும்பும் பிடித்து வரும் இறால் மீனுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com