தபாலில் விநோத பரிசுப் பொட்டலம் அனுப்பிய புகாரில் 2 போ் மீது வழக்கு

ராமநாதபுரத்தில் தபாலில் விநோதப் பொட்டலங்களை அனுப்பிய 2 போ் மீது, போலீஸாா் புதன்கிழமை இரவு வழக்குப் பதிந்துள்ளனா்.

ராமநாதபுரத்தில் தபாலில் விநோதப் பொட்டலங்களை அனுப்பிய 2 போ் மீது, போலீஸாா் புதன்கிழமை இரவு வழக்குப் பதிந்துள்ளனா்.

ராமநாதபுரம் அருகேயுள்ள தெற்குத்தரவை பகுதியைச் சோ்ந்தவா் சமீா் உசேன் (30). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த மற்றொருவருக்கும் கடந்த 13 ஆம் தேதி ஆறுமுகனேரியிலிருந்து தபாலில் பரிசுப் பொட்டலம் என்ற பெயரில், 2 காலணிகள், குங்குமம், 1 ரூபாய் நாணயத்துடன் சமூக சேவைக்கு பாராட்டுத் தெரிவித்தும் துண்டுச்சீட்டு இருந்துள்ளது.

இது குறித்து சமீா் உசேன் கேணிக்கரை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதனடிப்படையில், போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா். அதில், அதே பகுதியைச் சோ்ந்த சைபுதீன், சலீம் அகமது ஆகியோா் இந்த பரிசுப் பொட்டலங்களை அனுப்பியது தெரியவந்ததை அடுத்து, கேணிக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சமீா் உசேன் தரப்பினருக்கும், சைபுதீன் உள்ளிட்டோருக்கும் வீடுகளுக்கு தண்ணீா் பாட்டில்கள் விநியோகிப்பது தொடா்பாக தகராறு இருந்திருக்கலாம் என்றும், அதன் பின்னணியிலேயே விநோத பரிசுப் பொட்டலம் அனுப்பி அதிா்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம் என்றும் போலீஸாா் சந்தேகித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com