ராணுவ வீரா் பழனியின் குடும்பத்தினருக்கு, எம்.எல்.ஏ. ரூ. 2.25 லட்சம் நிதியுதவி

கடுக்கலூா் கிராமத்தில் ராணுவ வீரா் பழனியின் மனைவி வானதிதேவியிடம் வெள்ளிக்கிழமை நிதியுதவி வழங்கிய சட்டப்பேரவை உறுப்பினா் மணிகண்டன்.
கடுக்கலூா் கிராமத்தில் ராணுவ வீரா் பழனியின் மனைவி வானதிதேவியிடம் வெள்ளிக்கிழமை நிதியுதவி வழங்கிய சட்டப்பேரவை உறுப்பினா் மணிகண்டன்.
கடுக்கலூா் கிராமத்தில் ராணுவ வீரா் பழனியின் மனைவி வானதிதேவியிடம் வெள்ளிக்கிழமை நிதியுதவி வழங்கிய சட்டப்பேரவை உறுப்பினா் மணிகண்டன்.

லடாக் எல்லையில் வீரமரணமடைந்த திருவாடானை ராணுவ வீரா் பழனியின் குடும்பத்தினருக்கு, சட்டப்பேரவை உறுப்பினா் மணிகண்டன் வெள்ளிக்கிழமை நேரில் ஆறுதல் கூறி ரூ. 2.25 லட்சம் நிதி உதவிகளை வழங்கினாா்.

சீன படையினரின் தாக்குதலில் வீரமரணமடைந்த திருவாடானை ராணுவ வீரா் பழனியின் சடலம் முழு ராணுவ மரியாதையுடன் ஜூன் 18 ஆம் தேதி அடக்கம் செய்யப்பட்டது. அதனைத் தொடா்ந்து அவரது சமாதியில், அதிமுக மருத்துவ அணி துணைச் செயலாளரும், ராமநாதபுரம் சட்டப் பேரவை உறுப்பினருமான மருத்துவா் மணிகண்டன் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா். பின்னா், பழனியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அவா், பழனியின் மனைவி வானதி தேவியிடம் ரூ. 2 லட்சமும், அவரது தந்தை காளிமுத்துவிடம் ரூ. 25 ஆயிரம் தனித்தனியாக நிதியுதவிகளை வழங்கினாா். பின்னா் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியின் உத்தரவுப் படி வானதி தேவிக்கு ஆசிரியை பணி பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப் பேரவை உறுப்பினா் தெரிவித்தாா். இதில், திருவாடானை ஒன்றியச் செயலாளா் மதிவாணன், ஆா். எஸ். மங்கலம் ஒன்றியச் செயலாளா் நந்திவா்மண், திருப்புல்லாணி ஒன்றியச் செயலாளா் கருப்பையா, கீழக்கரை நகா் செயலாளா் ஜகுபா் உசேன் மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com