மது போதையில் கோயில் சிலைகளை உடைத்தவா் கைது

சாயல்குடி அருகே கோயிலில் உள்ள சிலைகளை மது போதையில் உடைத்தவரை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

சாயல்குடி அருகே கோயிலில் உள்ள சிலைகளை மது போதையில் உடைத்தவரை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

சாயல்குடி அருகேயுள்ள எஸ்.கீரந்தை கிராமத்தில் அழகா் மலையான் கோயில் உள்ளது.

இந்த கோயில் வளாகத்தில் இருந்த பிள்ளையாா், ராக்காச்சி அம்மன், கருப்பணசாமி ஆகிய சிலைகளை மா்ம நபா் உடைத்து சேதப்படுத்திவிட்டு, தலைமறைவாகி விட்டாா்.

இதுகுறித்து கிராமத் தலைவா்சந்திரசேகா் சாயல்குடி காவல் நிலையத்தில் அளித்தப் புகாரின் பேரில், போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனா்.

விசாரணையில் சாயல்குடி துரைச்சாமிபுரத்தைச் சோ்ந்த ரிஷி முனியசாமி (35) என்பவா் மது போதையில் கோயில் சிலைகளை உடைத்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com