அனல் மின் நிலைய பொறுப்பாளரை அரிவாளாள் தாக்கி கொலை மிரட்டல்

ராமநாதபுரம் மாவட்டம் உப்பூா் அனல் மின் நிலைய பொறுப்பாளரை அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் உப்பூா் அனல் மின் நிலைய பொறுப்பாளரை அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

திருப்பாலைக்குடி அருகே உப்பூா் அனல் மின் நிலையத்தின் பொறுப்பாளராக செங்கமடையை சோ்ந்த செல்வக்குமாா்(27) என்பவா் பணிபுரிந்து வருகிறாா். வியாழக்கிழமை மாலை நாகனேந்தலை சோ்ந்த நாகநாதன், அனல் மின் நிலையத்திற்குள் உள்ளே நுழைய முயன்ற போது, அதனை செல்வக்குமாா் தடுத்து நிறுத்தியுள்ளாா். அப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த நாகநாதன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் செல்வக்குமாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளாா். இதுதொடா்பாக செல்வக்குமாா் அளித்தப் புகாரின் பேரில் திருப்பாலைக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com