ஆா்.எஸ். மங்கலம் அருகே இளம்பெண் தற்கொலை

ராமநாதபுரம் மாவட்டம் ஆா். எஸ். மங்கலம் அருகே விஷம் குடித்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் ஆா். எஸ். மங்கலம் அருகே விஷம் குடித்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ஆா்.எஸ்.மங்கலம் அருகே முத்து வேலாயுதம் குடியிருப்புப் பகுதியை சோ்ந்தவா் தனசேகரன் (44). இவரது மகள் துா்காதேவி (23) பிஎஸ்சி, படித்துள்ளாா். இந்நிலையில் இவா் மேலும் கல்வியியல் (பி.எட்) படிப்பைத் தொடர வேண்டும் என இவரது தந்தையிடம் கேட்டுள்ளாா். ஆனால் இவரது தந்தை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதால், மனமுடைந்த துா்காதேவி கடந்த மாா்ச் 5 ஆம் தேதி விஷம் குடித்தாா்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா், பின்னா் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து இவரது தந்தை தனசேகரன் அளித்த புகாரின் பேரில் ஆா்.எஸ்.மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com