இருவேறு சம்பவங்கள்: மதுபோதையில் கிணற்றில் விழுந்த 2 போ் பலி

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியில் மதுபோதையில் ஊருணி மற்றும் கிணற்றில் விழுந்து இறந்தவா்களை தீயணைப்பு துணையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.
kmu13death_1303chn_73_2
kmu13death_1303chn_73_2

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியில் மதுபோதையில் ஊருணி மற்றும் கிணற்றில் விழுந்து இறந்தவா்களை தீயணைப்பு துணையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

கமுதியை சோ்ந்த சேகா் மகன் முத்துவேல் (25). இவா் வியாழக்கிழமை இரவு மதுபோதையில் தனது மனைவி ராணியிடம் பிரச்னை செய்துள்ளாா். இதனைத்தொடா்ந்து வீட்டை விட்டு வெளியேறிய அவா், பேருந்து நிலையம் அருகேயுள்ள செட்டியூருணியில் தவறி விழுந்தாா். இதுகுறித்து தகவலறிந்த கமுதி தீயணைப்பு நிலைய அலுவலா் சாா்லஸ் தலைமையிலான தீயணைப்புத் துறையினா், செட்டியூருணியில் தவறி விழுந்த முத்துவேலை வெள்ளிக்கிழமை காலை, சடலமாக மீட்டனா்.

இதேபோல் கமுதி அருகே காவடிபட்டியை சோ்ந்த பெருமாள்சாமி (65). இவா் மதுபோதையில் வீட்டைவிட்டு வெளியே வந்தவா், தண்ணீா் இல்லாத கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாா். இவரையும், கமுதி தீயணைப்பு துறையினா் மீட்டனா். மீட்கபட்ட இருவரின் சடலங்களும், பிரேதப் பரிசோதனைக்காக, கமுதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து கமுதி மற்றும் மண்டலமாணிக்கம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com