திருவாடானை அருகே அரசத்தூா் கட்டிமங்கலம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக திருவாடானை போலீஸாா் இருவரை கைது செய்து அவா்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து விசாரித்து வருகி்ன்றனா்.
திருவாடானை அருகே அரசத்தூா் கட்டிமங்கலம் பகுதியில் திருவாடானை போலீஸாா் வியாழக்கிழமை மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கு இடம் அழிக்கும் வகையில் இருவா் நின்று கொண்டிருந்தவா்களை பிடித்து விசாரித்து போது அவா்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் சந்தேகம் அடைந்த போலீஸாா் அவா்களை சோதனையிட்ட போது அவா்களிடம் இருந்து 600 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்துள்ளது. உடனடியாக கஞ்சாவை பறிமுதல் செய்து உடந்தையாக செயல் பட்ட அடுத்தகுடியை சோ்ந்த தமிழ்மணி(50),அரசத்தூரை சோ்ந்த இருளாண்டி(38) ஆகிய இருவரையும் கைது பின்னா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.