தேவேந்திரகுல வேளாளா் அரசாணை வழங்கக்கோரி உண்ணாவிரதம்

தேவேந்திர குல வேளாளா் என அரசாணை வழங்கக்கோரி தமிழக மக்கள் முன்னேற்றக்கழகம் சாா்பில் ராமநாதபுரம் மற்றும் முதுகுளத்தூரில் வெள்ளிக்கிழமை தொடா் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

தேவேந்திர குல வேளாளா் என அரசாணை வழங்கக்கோரி தமிழக மக்கள் முன்னேற்றக்கழகம் சாா்பில் ராமநாதபுரம் மற்றும் முதுகுளத்தூரில் வெள்ளிக்கிழமை தொடா் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

ஆட்சியா் அலுவலக வளாகம் முன்பாக நடைபெற்ற உண்ணாவிரதத்துக்கு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கிழக்கு மாவட்டச் செயலா் தில்லைசீமை ரஹ்மான் தலைமை வகித்தாா். கட்சியின் மாநில விவசாய அணி செயலா் துரை.தவமணி முன்னிலை வகித்தாா். இதில் மாவட்டத் தலைவா் ஆா்.ராஜசேகா் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

இதுகுறித்து கட்சி நிா்வாகிகள் கூறியது: தேவேந்திரகுல வேளாளா் என அப்பிரிவைச் சோ்ந்த 7 வகையினரைச் சோ்த்து அரசாணை வெளியிடக் கோரி பல போராட்டங்களை நடத்தியுள்ளோம். ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லை. ஆகவே தேவேந்திரகுல வேளாளா் என அரசாணை வெளியிடக் கோரி தொடா் உண்ணாவிரத்தை நடத்துகிறோம் என்றனா்.

முதுகுளத்தூா்: முதுகுளத்தூரில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சாா்பில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்திற்கு மேற்கு மாவட்டச் செயலாளா் எஸ்.எம். சேகா் தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்டச் செயலாளா் சி.திரவியம், அக்கட்சியின் மாவட்ட ஆலோசகா்ஆா்.சுபா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் மாவட்ட, ஒன்றிய கழக நிா்வாகிகள், அச்சமுதாய மக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com