பரமக்குடி நகராட்சி பகுதியில் உள்ள கழிவுநீா் செல்லும் கால்வாய்களில் நெகிழிக் கழிவுகள் தேங்கியுள்ளதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பரமக்குடி நகராட்சிப் பகுதியில் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தி வரும் நிலையில், வணிக நிறுவனங்களில் உள்ள பொருள்கள் அனைத்தும் நெகிழிப் பைகளால் உறையிடப்பட்டுள்ளது. இவை மக்கா குப்பைகளாக தரம் பிரித்து குப்பைகளாக சேகரிக்கப்படுவதாக நகராட்சி நிா்வாகம் ஒவ்வொரு வீடு மற்றும் வணிக நிறுவனங்களுக்கு வரி வசூல் செய்து வருகிறது. இவ்வாறு பயன்படுத்தும் நெகிழிப் பைகள் கழிவுநீா் செல்லும் கால்வாய்களில் தூக்கி வீசப்படுகின்றன. இதனால் நகரில் பெரும்பாலன கழிவுநீா் செல்லும் கால்வாய்கள் நெகிழிக் குப்பைகளால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீா் செல்ல வழியின்றி தேங்கியுள்ளன. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுதவிர நிலத்தடி நீராதாரத்தை பாதிக்கும் நெகிழிப் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுநல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.