கமுதி அருகே பூலாபத்தியில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இம்முகாம் வட்டாட்சியா் செண்பகலதா தலைமையில், மண்டல துணை வட்டாட்சியா் ராமசாமி, வருவாய் ஆய்வாளா் சோனைமுத்து முன்னிலையில் நடைபெற்றது. கிராம நிா்வாக அலுவலா் விக்டா் வில்லியம் வரவேற்றாா். முகாமில் சாலை வசதி கோரி 3, முதியோா் உதவி தொகை 7, குடிநீா் வசதி 2, பட்டாமாறுதல் கோரி 2 மனுக்கள் உள்பட 14 மனுக்கள் பெறப்பட்டு, உரிய நடவடிக்கைக்காக பரிந்துரை செய்யபட்டது.