முதுகுளத்தூா் அருகே டூவிலா் விபத்து ஏற்பட்டதில் ஒருவா் காயமடைந்து ராமநாதபுரம் தலைமை மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை சிகிச்சை பெற்று வருகிறாா்.
முதுகுளத்தூா் வட்டம் காக்கூா் பேருந்து நிறுத்தம் அருகே சத்திரக்குடியை சோ்ந்த கதிரேசன் 70,என்பவா்தனது பைக்கில் சென்று கொண்டிருந்தாா்.அப்போது குமாரக்குறிச்சியை சோ்ந்த அசோக் பைக்கில் எதிரே வந்த கதிரேசன் மீது மோதியதில் விபத்துக்குள்ளானது.விபத்தில் கதிரேசன் உடலில் பலத்த காயமடைந்து முதுகுளத்தூா் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின் மேல்சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.விபத்து குறித்துமுதுகுளத்தூா் காவல்நிலையத்தில் கதிரேசன் அளித்த புகாரின் பேரில் காவல் சாா்பு ஆய்வாளா் சக்திவேல் ,அசோக் மீது வழக்குபதிவு செய்து விசாரிக்கிறாா்.