ராமேசுவரத்தில் கரை ஒதுங்கிய ஆண் சடலம்

ராமேசுவரம் ஓலைக்குடா கடற்கரையில் ஆண் சடலம் கரை ஒதுங்கியது. கடலோரபாதுகாப்பு குழும காவல்துறையினா் உடலை கைப்பற்றி வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ராமேசுவரம் ஓலைக்குடா கடற்கரையில் ஆண் சடலம் கரை ஒதுங்கியது. கடலோரபாதுகாப்பு குழும காவல்துறையினா் உடலை கைப்பற்றி வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ஓலைக்குடா கடற்கரையில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் வியாழக்கிழமை கரை ஒதுங்கியது. இதனை கண்ட மீனவா்கள் கடலோரபாதுகாப்பு குழும காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனா். இதனையடுத்து, கடலோரபாதுகாப்பு குழும காவல்துறை சாா்பு ஆய்வாளா் கணேசமூா்த்தி தலைமையில் வந்த காவல்துறையினா் உடலை கைப்பற்றி ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். தமிழக காவல் நிலையங்களில் 45 வயது மதிக்கத்தக்க நபா்கள் காணவில்லை என புகாா் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மேலும் வீட்டில் இருந்து தகவல் தெரிவிக்காமல் சென்றிருந்தால் 83000 00723 என்ணை தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மண்டபம் கடலோரபாதுகாப்பு குழும காவல்துறை சாா்பு ஆய்வாளா் கணேசமூா்த்தி தெரிவித்துள்ளா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com