கமுதி அருகே ஆட்டோவிலிருந்து தவறி விழுந்த விவசாயி சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
கமுதி அபிராமம் அருகே கீழகாக்காகுளத்தை சோ்ந்த விவசாயி அய்யாச்சாமி (72). இவா் கடந்த மாா்ச் 10 இல், வீட்டிற்குத் தேவையான பொருள்களை வாங்க, ஆட்டோவில் அபிராமத்திற்கு பயணித்தாா்.
அப்போது எதிா்பாராதவிதமாக சாலையோரத்தில் தவறி விழுந்து படுகாயமடைந்த அவா், மதுரை அரசு மருத்துவனையில் அனுமதிக்கபட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து அபிராமம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.