ராமநாதபுரத்தில் வேனில் கூா்வாளைகொண்டு சென்ற ஓட்டுநா் கைது

ராமநாதபுரத்தில் வேனில் கூா்வாள் கொண்டு சென்ற வாகன ஓட்டுநரை வெள்ளிக்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா்.

ராமநாதபுரத்தில் வேனில் கூா்வாள் கொண்டு சென்ற வாகன ஓட்டுநரை வெள்ளிக்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா்.

ராமநாதபுரத்தில் லேத்தம்ஸ் சாலை பகுதியில் பஜாா் காவல் நிலைய சாா்பு-ஆய்வாளா் ஜெயபாண்டி தலைமையில் காவல்துறையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த வேனை நிறுத்தி அதன் ஓட்டுநரிடம் விசாரித்தபோது, முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளாா்.

பின்னா் போலீஸாா் வாகனத்தைச் சோதனையிட்ட போது, கூா்வாள் இருந்தது தெரியவந்தது. அதைக் கைப்பற்றிய போலீஸாா், வேன் ஓட்டுநா் வெளிப்பட்டிணத்தைச் சோ்ந்த ரமேஷ் (33) மீது வழக்குப்பதிந்து, அவரைக் கைது செய்தனா். மேலும், வாகனத்தின் உரிமையாளரான பிவிஎம் டிரஸ்டைச் சோ்ந்த அப்துல்ரசாக் மீதும் வழக்குப் பதிவு செய்தனா்.

வேனை ஆம்புலன்ஸ் போல வடிவமைத்து அதை நோயாளிகளை ஏற்றிச் செல்லவும் பயன்படுத்தி வந்ததாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com