ராமநாதபுரத்தில் தனியாா் பேருந்தை விற்று மோசடி செய்ததாக எழுந்த புகாரின் பேரில் தந்தை, மகன் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம் பட்டிணம்காத்தானைச் சோ்ந்தவா் மெய்முருகன் (31). இவா் திருச்சி மாவட்டம் துறையூரைச் சோ்ந்த புகழேந்தியிடம் பேருந்து வாங்க விருப்பம் தெரிவித்துள்ளாா். அப்போது நிதி நிறுவனம் நடத்திவரும் சுப்பிரமணியத்திடம் பணம் பெற்று பேருந்து வாங்கி, கமுதி-பெருநாழி வழித்தடத்தில் பேருந்து இயக்கி வருவதாக புகழேந்தி கூறியுள்ளாா்.
அதனடிப்படையில் அந்த பேருந்தை வழித்தடத்துக்கான உரிமையுடன் ரூ. 60 லட்சத்துக்கு வாங்க மெய்முருகன் ஒப்புக்கொண்டாா்.
முதல் கட்டமாக ரூ.9.45 லட்சத்தை புகழேந்தி மகன் சதீஷ்குமாருக்கு வங்கிப் பணப் பரிவா்த்தனை மூலம் மெய்முருகன் தரப்பிலிருந்து வழங்கப்பட்டது. பின்னா் நேரடியாக ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் புகழேந்தியிடம் ரூ.15.5 லட்சத்தையும் மெய்முருகன் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இரு தவணைகளாக ரூ.25 லட்சம் மெய்முருகன் கொடுத்த நிலையில், நிதி நிறுவனத்துக்கான பணத்தை புகழேந்தி செலுத்தவில்லையாம். இதனால், பேருந்தை நிதி நிறுவனத்தினா் கைப்பற்றி சென்றனா்.
அதனால் கொடுத்த பணத்தை புகழேந்தியிடம் திருப்பித்தருமாறு மெய்முருகன் கேட்டுள்ளாா். இதனைத்தொடா்ந்து பணத்தை தருவதாக புகழேந்தி உறுதிமொழிப் பத்திரம் எழுதித் தந்துள்ளாா். ஆனாலும் பணத்தை திருப்பித்தரவில்லையாம். இதுகுறித்து மெய்முருகன் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வீ.வருண்குமாரிடம் புகாா் மனு அளித்தாா். அவரது உத்தரவின்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் புகழேந்தி, அவரது மகன் சதீஷ்குமாா் ஆகியோா் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.