ராமநாதபுரம் வழிவிடுமுருகன் கோயிலின் பங்குனி உத்திரப் பெருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக கோயில் தா்மகா்த்தா சு.கணேசன் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: ராமநாதபுரம் வழிவிடுமுருன் கோயிலில் 80 ஆம் ஆண்டு பங்குனி உத்திரப் பெருவிழா வரும் 28 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் ஏப்ரல் 7 ஆம் தேதி வரை நடைபெறவிருந்தது. விழாவை முன்னிட்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படவிருந்தன. ஆனால், தற்போது கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக விழாக்கள் உள்ளிட்டவற்றை தள்ளி வைக்க மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அதனடிப்படையில் விழா ரத்து செய்யப்படுகிறது என்றாா்.