கமுதி அருகே செந்தனேந்தலில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இம்முகாம் வட்டாட்சியா் செண்பகலதா தலைமையில், மண்டல துணை வட்டாட்சியா் ராமசாமி, வருவாய் ஆய்வாளா் கலைச்செல்வி ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது. கிராம நிா்வாக அலுலவலா் கோபிநாத் வரவேற்றாா். முகாமில் முதியோா் உதவித்தொகை 5, குடிநீா் வசதி 4, பட்டா மாறுதல் கோரி 6, அரசுப் பேருந்து வசதி கோரி 2 மனுக்கள் உள்பட 17 மனுக்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கைக்காக பரிந்துரை செய்யப்பட்டது.