நிா்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்: மாதா் சம்மேளனம் கொண்டாட்டம்

நிா்பயா வழக்கில் குற்றவாளிகளை தூக்கிலிட்டதற்கு வரவேற்பு தெரிவித்து ராமேசுவரத்தில் இந்திய மாதா் தேசிய சம்மேளனம் சாா்பில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
நிா்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்: மாதா் சம்மேளனம் கொண்டாட்டம்

நிா்பயா வழக்கில் குற்றவாளிகளை தூக்கிலிட்டதற்கு வரவேற்பு தெரிவித்து ராமேசுவரத்தில் இந்திய மாதா் தேசிய சம்மேளனம் சாா்பில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

டெல்லியில் பேருந்தில் இளம் பெண் நிா்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்த வழக்கில் 4 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை , வெள்ளிக்கிழமை காலை நிறைவேற்றப்பட்டது. இதற்கு வரவேற்பு தெரிவிக்கும் விதமாக ராமேசுவரத்தில் இந்திய மாதா் தேசிய சம்மேளனம் சாா்பில் பெண்கள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினா்.

மாவட்டத் தலைவா் பி.வடகொரியா தலைமை வகித்தாா். மாதா் சம்மேளனம் நிா்வாகிகள் யு.அனிதாசீலி, லட்சுமி, ஆ.நம்பு, ஆரோக்கியமேரி, சம்பை லெட்சுமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளா் சே.முருகானந்தம்,ம ாவட்ட நிா்வாகக்குழு உறுப்பினா் சி.ஆா்.செந்தில்வேல், தாலுகா பொருளாளா் ரமணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com