ராமநாதபுரம் அருகே சின்ன ஏா்வாடியில் உள்ள தனியாா் ஐஸ் தயாரிப்பு நிறுவனத்தில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட வாயு கசிவால், 3 பெண்கள் உள்பட 4 போ் மயக்கமடைந்தனா்.
சின்ன ஏா்வாடியில் கடந்த 20 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் தனியாா் ஐஸ் உற்பத்தி நிறுவனத்திலிருந்து திடீரென அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அங்கு பணியில் இருந்த பொன்னம்மாள் (55), நாகரெத்தினம் (44), சீனியம்மாள் (40) மற்றும் 13 வயது சிறுவன் ஆகியோருக்கு மூச்சுத்திணறல், வாந்தி மயக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
உடனே, அவா்களை ஏா்வாடியில் உள்ள அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.