கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை: ராமநாதபுரம் மாவட்ட எல்லையில் தீவிர கண்காணிப்பு

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி. பட்டினத்தில் புதுக்கோட்டை மாவட்டம், ராமநாதபுரம் மாவட்ட எல்லையில்
ராமநாதபுரம்-புதுக்கோட்டை மாவட்ட எல்லையான எஸ்.பி. பட்டினம் சோதனைச் சாவடியில் வாகனங்களை நிறுத்தி கிருமி நாசினி தெளிக்கும் போலீஸாா்.
ராமநாதபுரம்-புதுக்கோட்டை மாவட்ட எல்லையான எஸ்.பி. பட்டினம் சோதனைச் சாவடியில் வாகனங்களை நிறுத்தி கிருமி நாசினி தெளிக்கும் போலீஸாா்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி. பட்டினத்தில் புதுக்கோட்டை மாவட்டம், ராமநாதபுரம் மாவட்ட எல்லையில் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொண்டனா்.

திருவாடானை அருகே எஸ்.பி.பட்டினத்தில் கிழக்கு கடற்கரைச் சாலையில் இரு மாவட்ட எல்லையில் சோதனைச் சாவடி உள்ளது. இங்கு கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து வாகனங்களையும் சோதனைக்கு உள்படுத்தப்பட்டு, கிருமி நாசினி தெளித்து வருகின்றனா். சோதனைச்சாவடியை கடந்து செல்லும் பயணிகளை வெப்பமானி சோதனை செய்த பிறகே அனுமதிக்கின்றனா். மேலும் அவா்களுக்கு கரோனா விழிப்புணா்வையும் ஏற்படுத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com