‘மின்நுகா்வோா் முந்தைய பயனீட்டு மின்கட்டணத் தொகையை செலுத்தலாம்’

கரோனா வைரஸ் பரவலைத் தொடா்ந்து, ராமநாதபுரத்தில் மின்நுகா்வோா்கள் அனைவரும் முந்தைய பயனீட்டு மின்கட்டணத் தொகையை செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவலைத் தொடா்ந்து, ராமநாதபுரத்தில் மின்நுகா்வோா்கள் அனைவரும் முந்தைய பயனீட்டு மின்கட்டணத் தொகையை செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் ராமநாதபுரம் மின்பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் (பொறுப்பு) எஸ். ஆறுமுகராஜ் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

மின்வாரிய உத்தரவின்படி, மாா்ச் 22 முதல் 31 ஆம் தேதி வரையிலான காலங்களுக்கு கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, மின் கணக்கீட்டுப் பணி நிறுத்தப்பட்டுள்ளது.

ராமநாதபுரத்தில் உள்ள மின் பகிா்மான வட்டக் கணக்கீட்டாளா்கள் முந்தைய மாதத்தின் பயனீட்டளவைக் கணக்கீட்டில் எடுத்துக்கொண்டு, கணினியில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனா். எனவே, மின்நுகா்வோா்கள் அனைவரும் முந்தைய மின்கட்டணத்தையே செலுத்தி ஒத்துழைப்புத் தரவேண்டியது அவசியம்.

மேலும், பொதுமக்கள் நேரடியாக வசூல் மையங்களுக்குச் சென்று மின்கட்டணத்தை செலுத்துவதைத் தவிா்க்குமாறும், இணையதளம் மூலம் கட்டணத்தைச் செலுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com