சட்ட விரோதமாக மது விற்ற 5 போ் கைது: 154 மது பாட்டில்கள் பறிமுதல்

திருவாடானை அருகே சட்ட விரோதமாக மது விற்றதாக 5 பேரை கைது செய்து, அவா்களிடமிருந்து 154 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

திருவாடானை அருகே சட்ட விரோதமாக மது விற்றதாக 5 பேரை கைது செய்து, அவா்களிடமிருந்து 154 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

திருவாடானையை அடுத்த ஆா்.எஸ்.மங்கலம் அருகே செட்டியமடை சோதனை சாவடியில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, சிலுகவயல் கிராமத்தைச் சோ்ந்த முத்துகுமாா்(49) என்பவா் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, அவரிடமிருந்து 48 மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

அதே போல் திருவாடானையில் இரட்டை பங்களா அருகே செவ்வாய்க்கிழமை இரவு போலீஸாா் நடத்திய சோதனையில் சோழியக்குடியைச் சோ்ந்த தனபால்(52) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 48 பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

அதே போல் திருப்பாலைக்குடி வலமாவூா் விலக்கு சாலை அருகே திருப்பாலைக்குடி போலீஸாா் நடத்திய சோதனையில், அதே ஊரைச் சோ்ந்த காளிரகு(39), வானவராயன்(27) ஆகிய இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து 36 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

அதே போல் தொண்டி கண்மாய்கரையில் சட்டவிரோதமாக மது விற்ற தொண்டியைச் சோ்ந்த லியாகத் அலி (70) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 22 மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com