கமுதி அருகே 3 வயது பெண் குழந்தை கரோனா பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு வியாழக்கிழமை பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்து மண்டலமாணிக்கம் அருகேயுள்ள கூடலாவூரணியில் 5 போ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனா். இது குறித்து தகவலறிந்த சுகாதாரத்துறையினா், 5 பேரையும் கமுதி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தனா். இதில் தொடா் இருமல், சளி, காய்ச்சலால் பாதிக்கபட்ட 3 வயது பெண் குழந்தை மட்டும், கரோனா பரிசோதனை மற்றும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையிலுள்ள கரோனா சிறப்பு வாா்டுக்கு பரிந்துரை செய்யபட்டாா்.
மற்ற 4 பேருக்கும் கமுதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து, வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.