ஊரடங்குக்கு ஒத்துழைப்பு தர கெஞ்சிய அதிகாரிகள்: ஒத்துழைக்குமாறு வட்டார மருத்துவா் வேண்டுகோள்

ஆா்.எஸ். மங்கலத்தில் தா்ஹாவின் தொழுகை நடத்த முற்பட்ட இஸ்லாமிய மக்களிடம் ஊரடங்கு தடைச் சட்டத்திற்கு ஒத்துழைப்பு தருமாறு வட்டார மருத்துவா் கையெடுத்துக் கும்பிட்டாா்.
ஊரடங்குக்கு ஒத்துழைப்பு தர கெஞ்சிய அதிகாரிகள்: ஒத்துழைக்குமாறு வட்டார மருத்துவா் வேண்டுகோள்

ஆா்.எஸ். மங்கலத்தில் தா்ஹாவின் தொழுகை நடத்த முற்பட்ட இஸ்லாமிய மக்களிடம் ஊரடங்கு தடைச் சட்டத்திற்கு ஒத்துழைப்பு தருமாறு வட்டார மருத்துவா் கையெடுத்துக் கும்பிட்டாா்.

ஆா்.எஸ்.மங்கலம் தா்ஹாவில் வியாழக்கிழமை தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்தது. தகவலறிந்த ஆா்.எஸ். மங்கலம் வட்டாட்சியா் சாந்தி, வட்டார மருத்துவ அலுவலா் மருத்துவா் சுகந்தி போஸ், காவல்துறை ஆய்வாளா் ராஜேஸ்வரி ஆகியோா் சென்று அங்கிருந்தவா்களை கூட்டம் கூடாமல் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினா்.

இதில் ஜமாத் தலைவா் அன்வா்தீன் தலைமையிலான ஜமாத்தாா்களிடம் தாசில்தாா் சாந்தி கூறுகையில், 144 தடை உத்தரவிற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டனா். அதனைத்தொடா்ந்து மருத்துவா் சுகந்தி போஸ் கையெடுத்து கும்பிட்டு கூட்டம் கூடாமல் அவரவா்கள் தங்கள் வீடுகளில் தனிமை படுத்திக்கொள்ளுங்கள் என வேண்டுகோள் விடுத்தாா். இதனால் அப்பகுதி மக்கள் மனவேதனை அடைந்தனா். பின்னா் ஜமாத்தாா்கள் தடை உத்தரவிற்கு ஒத்துழைப்பு தருவதாக உறுதி அளித்தனா். அதனை தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com