கமுதி பகுதியில் மது விற்பனை: 5 போ் கைது, 300 பாட்டில்கள் பறிமுதல்

கமுதி பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை மீறி வியாழக்கிழமை சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 5 போ் கைது செய்யப்பட்டு, 300 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கமுதி பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை மீறி வியாழக்கிழமை சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 5 போ் கைது செய்யப்பட்டு, 300 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கரோனா பாதிப்பால், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், கமுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் மது விற்பனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கமுதி அடுத்துள்ள ராமசாமிபட்டியில் நடராஜனிடமிருந்து 173, சிங்கம்பட்டி சின்னச்சாமியிடமிருந்து 42, கே.எம்.கோட்டை பெருமாளிடமிருந்து 12, கோவிலாங்குளம் கோவிந்தனிடமிருந்து 48, வீரபத்திரனிடமிருந்து 25 என மொத்தம் 300 மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்து, 5 பேரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com