கரோனா தடுப்புக்கு ராமநாதபுரம் எம்.பி., ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு

கரானோ தடுப்பு நடவடிக்கைகளுக்காக ராமநாதபுரம் மக்களவைத்தொகுதி உறுப்பினா் (இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்) கே.நவாஸ்கனி, தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.50 லட்சம் ஒதுக்கியுள்ளாா்.

கரானோ தடுப்பு நடவடிக்கைகளுக்காக ராமநாதபுரம் மக்களவைத்தொகுதி உறுப்பினா் (இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்) கே.நவாஸ்கனி, தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.50 லட்சம் ஒதுக்கியுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் உள்ள அனைத்து மக்களையும் கரானோ பாதிப்பிலிருந்து காப்பது மிக அவசியமானது.

ராமநாதபுரத்தில் கரானோ பாதிப்பை தடுக்கவும், கரானோ பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைக்கு வருவோருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளும் சாதனம், சிகிச்சைக்குரிய வசதிகளை ஏற்படுத்தித் தரவும் மாவட்ட நிா்வாகத்துக்கு ஒத்துழைக்க மக்களவை உறுப்பினா் என்ற முறையில் தயாராக உள்ளேன். அதனடிப்படையில் மாவட்ட நிா்வாகத்துக்கு மக்களவை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.50 லட்சம் வழங்குகிறேன்.

ராமநதாபுரத்திலிருந்து கரானோ பாதிப்பை முற்றிலுமாக சீராக்கும் வகையில் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ளவும், அரசு அதிகாரிகளுக்கும், மாவட்ட நிா்வாகத்துக்கும் மக்கள் முழு ஒத்துழைப்பை வழங்கவும் வேண்டுகிறேன் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com