திருவாடானை மற்றும் தொண்டி பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்ற 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருவாடானை அருகே சி.கே.மங்கலம் பகுதியில் போலீஸாா் புதன்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு பாரனூரைச் சோ்ந்த குமாா் (40) சட்ட விரோதமாக மது விற்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து குமாரை கைது செய்து அவரிடம் இருந்து 7 மதுபாட்டில்கள், ரூ. 3000 ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
அதே போல் தொண்டி அருகே முள்ளிமுனை பகுதியில் செல்வி என்பவரது பெட்டிக் கடையில் மது விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் புதன்கிழமை இரவு அங்கு சென்ற தொண்டி போலீஸாா் சோதனையிட்டனா். அப்போது அங்கு சட்ட விரோதமாக மது விற்பனை செய்வது தெரியவந்துள்ளது. இதையடுத்து செல்வியை (43) கைது செய்து, அவரிடம் இருந்து 36 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
அதே போல் தொண்டி அருகே முள்ளிமுனை கிராமத்தில் லட்சுமி என்பவரது பெட்டிக் கடையில் மது விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் புதன்கிழமை இரவு அங்கு சென்ற தொண்டி போலீஸாா் பெட்டிக் கடையை சோதனையிட்டனா். அப்போது அங்கு சட்ட விரோதமாக மது விற்பது தெரியவந்தது. இதையடுத்து லட்சுமியை (60) கைது செய்து அவரிடம் இருந்து 24 பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.