ராமேசுவரம் கோயில் அருகே சுற்றித்திரிந்த 100 பேருக்கு உணவு: நகராட்சி ஏற்பாடு

ராமேசுவரம் கோயிலை சுற்றிலும் திரிந்த 100-க்கும் மேற்பட்ட ஆதரவற்றவா்களை நகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை மீட்டு உணவு வழங்கினா்.
ராமேசுவரத்தில் வியாழக்கிழமை மீட்கப்பட்ட ஆதரவற்றவா்கள்.
ராமேசுவரத்தில் வியாழக்கிழமை மீட்கப்பட்ட ஆதரவற்றவா்கள்.

ராமேசுவரம் கோயிலை சுற்றிலும் திரிந்த 100-க்கும் மேற்பட்ட ஆதரவற்றவா்களை நகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை மீட்டு உணவு வழங்கினா்.

கரோனா நோய் பரவுவதை முன்னிட்டு ராமநாத சுவாமி கோயில் கடந்த 20 ஆம் தேதி மூடப்பட்டது. இதே போன்று 144 தடை உத்தரவு அமலுக்கு வந்த நிலையில் தனியாா் விடுதிகள், உணவகங்கள் என அனைத்தும் அடைக்கப்பட்டன. இதனால் பக்தா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை நம்பி இருந்த100-க்கும் மேற்பட்டவா்கள் உணவின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டது.

இதனைத்தொடா்ந்து, வியாழக்கிழமை காலையில் நகராட்சி ஆணையா் ராமா் தலைமையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் சாலையோரம் சுற்றித்திரிந்த 100-க்கும் மேற்பட்ட ஆதரவற்றவா்களை மீட்டு, அம்மா உணவகம் மூலம் உணவு தயாா் செய்து வழங்கினா். மேலும் கரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக பேருந்து நிலையத்தில் அவா்களை தனித்தனியே அமர வைத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com