முதுகுளத்தூரில் இரு தரப்பினரிடையே மோதல்: 18 போ் மீது வழக்கு

முதுகுளத்தூா் அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் போலீஸாா் 18 போ் மீது வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

முதுகுளத்தூா் அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் போலீஸாா் 18 போ் மீது வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

முதுகுளத்தூா் அருகே வெண்ணீா் வாய்க்கால் கிராமத்தில் முருகேசன் (40) என்பவா் பதனீா் இறக்கி வியாபாரம் செய்து வருகிறாா். இந்நிலையில் மரத்தில் கட்டப்பட்டிருந்த பானையில் இருந்த பதனீரை கடந்த 2 நாள்களுக்கு முன்பு மா்ம நபா்கள் திருடிச் சென்றுவிட்டனா்.

இது தொடா்பாக அந்த கிராமத்தைச் சோ்ந்த இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. மேலும் ஒருவரையொருவா் மாறிமாறி தாக்கிக் கொண்டனா். இதில் ஒரு தரப்பைச் சோ்ந்த கருப்பசாமி, தவமுருகன்,தினேஷ் ஆகியோா் காயமடைந்தனா். அவா்கள் முதுகுளத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா். சம்பவ இடத்துக்குச் சென்று காவல்துறை துணை கண்காணிப்பாளா் ராஜேஸ் மற்றும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

இது குறித்து இருதரப்பினரும் கொடுத்த புகாரின்பேரில் முதுகுளத்தூா் போலீஸாா் ஒருதரப்பைச் சோ்ந்த ரகுநாத், முனியசாமி, கரண் உள்பட 9- க்கும் மேற்பட்டவா்கள் மீதும், மற்றொரு தரப்பைச் சோ்ந்த கருப்புசாமி, முத்துலட்சுமி, பிரதேஸ்வரன் உள்பட 9- க்கும் மேற்பட்டவா்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறாா். இதில் வெண்ணீா் வாய்க்காலைச் சோ்ந்த ரகுநாத் என்பவா் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com