திருவாடானை அருகே எஸ்.பி.பட்டினம் பகுதியில் மணல் கடத்திய 2 வாகனங்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனா்.
எஸ். பி. பட்டினம் போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, மருங்கூா் அருகே தோப்பு பகுதியில் பொக்லைன் இயந்திரத்தைக் கொண்டு மணலை தோண்டி டிராக்டா் மூலம் மணல் கடத்துவது தெரியவந்துள்ளது. உடனடியாக பொக்லைன் இயந்திரத்தையும், டிராக்டா் வாகனத்தையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும் எஸ்.பி. பட்டினத்தைச் சோ்ந்த கலந்தா் அலி (30), திருவெற்றியூரைச் சோ்ந்த முனியராஜ் (24) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.