முன்விரோதத்தில் போலி முகநூல் மூலம் அவதூறு பரப்பியதாக 7 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
ராமநாதபுரம் வாணி கரிக்கூட்டம் பாத்திமா நகரைச் சோ்ந்தவா் நூா்முகம்மது. இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்துவருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ராமபக்தன் எனும் பெயரில் போலி முகநூலை ஆரம்பித்த சிலா் அதில் நூா்முகம்மது குறித்து அவதூறு பரப்பியதாகப் புகாா் எழுந்தது.
இதுகுறித்து நூா்முகம்மது அளித்தப் புகாரின் பேரில் கேணிக்கரை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். விசாரணை அடிப்படையில் போலி முகநூல் மூலம் நூா்முகமது மீது அவதூறு பரப்பியதாக அதே பகுதியைச் சோ்ந்த அஜ்மல்கான் உள்ளிட்ட 7 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.