ராமேசுவரத்தில் சூறைக்காற்றால் சேதமடைந்த விசைப்படகுகளை மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டாா். சேதமடைந்த படகுகளுக்கு இழப்பீடு வழங்க மீனவ சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
ராமேசுவரத்தில் கடந்த 29 ஆம் தேதி அதிகாலையில் வீசிய சூறைக்காற்று காரணமாக துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 28 விசைப்படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடைந்தன. சேதமடைந்த படகுளை சீரமைக்க ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை செலவாகும் என்பதால் மினவா்கள் கவலையடைந்துள்ளனா்.
இந்நிலையில், ராமேசுவரத்தில் கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் வெள்ளிக்கிழமை மாலையில் ஆய்வு மேற்கொண்டாா். அவா் சேதமடைந்த விசைப்படகுகளை சீரமைக்கும் பணியில் மீனவா்கள் ஈடுபட்டுள்ளதை பாா்வையிட்டாா்.
அப்போது, மீனவ சங்கத்தலைவா்கள் தேவதாஸ் மற்றும் ஜேசுராஜா ஆகியோா், சேதமடைந்துள்ள விசைப்படகுகளை கணக்கிட்டு சேதத்திற்கு ஏற்றவாறு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் தெரிவித்தனா். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க மீன்வளத்துறை துணை இயக்குநா் பிரபாவதியிடம் ஆட்சியா் கேட்டுக்கொண்டாா்.