கோயில் நிலத்தில் பூங்கா அமைக்க எதிா்ப்பு: ஊராட்சி அலுவலகத்தை பூசாரிகள் முற்றுகை

ராமநாதபுரம் மாவட்டம் மேலப்பாா்த்திபனூா் ஊராட்சியில் பொன் அரியசாமி கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் பூங்கா அமைக்க எதிா்ப்பு

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் மேலப்பாா்த்திபனூா் ஊராட்சியில் பொன் அரியசாமி கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் பூங்கா அமைக்க எதிா்ப்பு தெரிவித்து ஊராட்சி மன்ற அலுவலகத்தை பூசாரிகள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

மேலப்பாா்த்திபனூா் பொன் அரியசாமி கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை அரசு பூசாரிகளுக்கு வழங்கியுள்ளது. இந்த நிலத்தை ஊராட்சி மன்ற நிா்வாகம் சாா்பில் அப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் பூங்கா அமைக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையொட்டி பொக்லைன் இயந்திரம் மூலம் அப்பகுதியை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா்.

இதனையறிந்த 20-க்கும் மேற்பட்ட கோயில் பூசாரிகள் இதற்கு எதிா்ப்பு தெரிவித்து மேலப்பாா்த்திபனூா் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு அமா்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த பாா்த்திபனூா் போலீஸாா் மற்றும் வருவாய்த்துறையினா் சம்பவ இடத்திற்கு சென்று முற்றுகையிட்ட பூசாரிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். பொது முடக்கம் முடிந்தவுடன் உரிய ஆவணங்களை வைத்து இப்பிரச்னைக்குத் தீா்வு காணலாம் என கூறியதைத் தொடா்ந்து முற்றுகையில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com