வங்க கடலில் புயல் உறுவாகுவதையொட்டி மீனவர்களுக்கு முன்னெச்சரிக்கை விடுக்கும் விதமாக பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு சனிக்கிழமை ஏற்றப்பட்டது.
வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மண்டலமாக உறுவாகி தற்போது அம்பான் புயலான மாறி உள்ளது. இதனையடுத்து, ராமநாதபுரம் மாவட்டம்,வங்காள விரிகுடா கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்லும் நாட்டுப்படகு மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு சனிக்கிழமை ஏற்றப்பட்டுள்ளது.
இந்த புயல் ஒடிசா தெற்கு சுமார் 1100 கி.மீ திகாவிலிருந்து 1250 கி.மீ, மேற்கு வங்கம் மற்றும் பங்காளதேஷ் தென்மேற்கு 1330 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளதாக பாம்பன் துறைமுக அதிகாரி தகவல் தெரிவித்தார்.