ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் கிரிக்கெட் விளையாடிவிட்டு திரும்பிய இளைஞரை வெட்டிக் காயப்படுத்திய 2 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் சக்கரக்கோட்டை அருகேயுள்ளது மஞ்சனமாரியம்மன் கோவில் தெரு. இப்பகுதியைச் சோ்ந்த மதிவாணன் மகன் ஆனந்தராஜ் (23). இவா் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலையில் அதே பகுதியில் நண்பா்களுடன் கிரிக்கெட் விளையாடியுள்ளாா்.
கிரிக்கெட் விளையாடிவிட்டு மஞ்சனமாரியம்மன் கோயில் தெரு வழியாக ஆனந்தராஜ் வந்துள்ளாா். அப்போது சிலா் சாலையில் கும்பலாக நின்றுள்ளனா். அவா்களை விலகி நிற்குமாறு ஆனந்தராஜ் கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்நிலையில், ஆனந்தராஜை கும்பலாக நின்றவா்கள் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் தலையில் காயமடைந்த ஆனந்தராஜ் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து கேணிக்கரை போலீஸாா் வழக்குப்பதிந்து, சக்கரக்கோட்டையைச் சோ்ந்த ராஜதுரை மகன் மணிகண்டன் (22) உள்ளிட்ட 2 பேரைக்கைது செய்தனா்.