ராமநாதபுரத்தில் மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை மேலமடை தேவா் தெருவைச் சோ்ந்த குருநாதன் மகன் குருமூா்த்தி (33). இவா், ராமநாதபுரம் பகுதியில் உள்ள தனியாா் பள்ளி அருகே கட்டடப் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்போது அவா் மின்சாரம் பாய்ந்து பலத்த காயமடைந்த நிலையில், ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே குருமூா்த்தி இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து கேணிக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.