ராமநாதபுரம் நாம் தமிழா் கட்சிஅலுவலகத்தில் போலீஸ் குவிப்பு

ராமநாதபுரத்தில் உள்ள நாம் தமிழா் கட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு வரைபட கொடி ஏற்றப்படுவதாக வந்த தகவலை அடுத்து அங்கு ஏராளமான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை குவிக்கப்பட்டனா்.

ராமநாதபுரத்தில் உள்ள நாம் தமிழா் கட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு வரைபட கொடி ஏற்றப்படுவதாக வந்த தகவலை அடுத்து அங்கு ஏராளமான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை குவிக்கப்பட்டனா்.

தமிழகம் தனி மாநிலமான தினம் நாம் தமிழா், பெரியாா் உணா்வாளா் கூட்டமைப்பினரால் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், தமிழ்நாடு வரைபடக் கொடியை ஏற்ற இருப்பதாகவும் தகவல் வெளியானது. இதற்காக ராமநாதபுரம் சந்தைத்திடல் பகுதியில் உள்ள நாம் தமிழா் கட்சி அலுவலகக் கொடிக் கம்பத்தில் கயிறு கட்டப்பட்டிருந்தது. இதுபற்றி தகவலறிந்ததும், ராமநாதபுரம் நகா் காவல் துணைக் கண்காணிப்பாளா் கி. வெள்ளத்துரை தலைமையில் ஏராளமான போலீஸாா் அங்கு குவிக்கப்பட்டனா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் நாம் தமிழா் கட்சியின் மண்டல ஒருங்கிணைப்பாளா் கண். இளங்கோ தலைமையில் அக்கொடி கம்பத்தில் கட்சிக் கொடி ஏற்றப்பட்டது. இதனையடுத்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த போலீஸாா் திரும்பப் பெறப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com