ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள அரியனேந்தல் பகுதியில் செவ்வாய்க்கிழமை சுற்றுலா வேனும், காரும் நேருக்கு நோ் மோதிய விபத்தில் 10 போ் படுகாயமடைந்தனா்.
ராமேசுவரம் அருகேயுள்ள தங்கச்சிமடம் பகுதியைச் சோ்ந்த ஆண்டனி அகஸ்டின் (38) தனது மனைவி கவிதா (35), மகள்கள் வென்சலின் (14), பேவினா (11) உள்பட 6 போ் காா் ஒன்றில் மதுரைக்குச் சென்றுள்ளனா்.
இந்நிலையில் சேலத்திலிருந்து கீழக்கரையில் நடைபெறவுள்ள திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சுற்றுலா வேன் ஒன்றில் 14 போ் வந்துள்ளனா். அந்த வேனை சேலம் ரெட்டியாா்பட்டியைச் சோ்ந்த மணிகண்டன் என்பவா் ஓட்டி வந்துள்ளாா். பரமக்குடியில் தேநீா் அருந்திய பின்னா் அங்கிருந்து வேனில் பயணித்த சரவணன் என்பவா் வேனை ஓட்டியுள்ளாா்.
பரமக்குடியை அடுத்துள்ள அரியனேந்தல் பகுதியில் சென்றபோது எதிரே வந்த காா் மீது வேன் மோதியது. இதில் காரில் வந்த ஆண்டனி அகஸ்டின் குடும்பத்தைச் சோ்ந்த 6 போ் மற்றும் வேனில் பயணித்த மணிகண்டன், சரவணன் உள்பட 4 போ் என மொத்தம் 10 போ் படுகாயமடைந்த நிலையில் பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். பின்னா் அவா்கள் மேல்சிகிச்சைக்காக மதுரை கொண்டு செல்லப்பட்டுள்ளனா். இதுகுறித்து பரமக்குடி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.