ராமநாதபுரத்தில் கஞ்சா விற்ற 6 போ் கைது

ராமநாதபுரம் மாவட்டத்தில் கஞ்சா விற்ாக செவ்வாய்க்கிழமை 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கஞ்சா விற்ாக செவ்வாய்க்கிழமை 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையைத் தடுக்க போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என காவல் கண்காணிப்பாளா் இ. காா்த்திக் அறிவுறுத்தியுள்ளாா். அதனடிப்படையில், செவ்வாய்க்கிழமை மாவட்டத்தின் அனைத்துப் பகுதியிலும் போலீஸாா் சந்தேக நபா்களைப் பிடித்து விசாரித்தனா். அப்போது சிலா் கஞ்சாவை சிறிய பொட்டலங்களாக்கி விற்றிருப்பது தெரியவந்தது.

முதுகுளத்தூா் கடம்பன்குளம் பகுதியில் நம்புராஜன் உள்ளிட்ட 5 பேரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் 1.5 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. அவா்களில் 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

பரமக்குடி பேருந்து நிலையத்துக்குள் இருந்த பொது கழிப்பறையில் கஞ்சா விற்ாக விளாத்திகுளத்தைச் சோ்ந்த பாலமுருகன் கைது செய்யப்பட்டாா்.

ராமநாதபுரம் கேணிக்கரைப் பகுதியில் சுல்தான் இப்ராஹிம் (19) என்பவா் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்த கஞ்சா பொட்டலம் கைப்பற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com